நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 29 மார்ச், 2012

பாரதிதாசன் பரம்பரை


பாரதிதாசன் பரம்பரை

  திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 1993 முதல் 1996 வரை “இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை: பாரதிதாசன் பரம்பரை விளக்கம் வரலாறு, மதிப்பீடு” என்னும் தலைப்பில் நிகழ்த்தப்பெற்ற முனைவர் பட்ட ஆய்வு பல்கலைக்கழகத்தின் இசைவுடன் 2001 இல் பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் நூல்வடிவம் பெற்றது. இந்த ஆய்வுக்குப் பேராசிரியர் முனைவர் மா.இராமலிங்கம்(எழில்முதல்வன்) அவர்கள் நெறியாளராக இருந்து நெறிப்படுத்தினார்.

  பாரதிதாசன் பரம்பரை என்ற இந்த நூல் முனைவர் பொற்கோ, முனைவர் இரா.இளவரசு, தமிழண்ணல் ஆகியோரின் அணிந்துரையுடன் வெளிவந்துள்ளது.

  1.இருபதாம் நூற்றாண்டில் தமிழ்க்கவிதைகள், 2. பாரதிதாசன் பரம்பரை தோற்றமும் வரலாறும், 3. பாரதிதாசன் பரம்பரையினர் அறிமுகம், 4.பாரதிதாசன் படைப்புகளுக்கும் பரம்பரையினர் படைப்புகளுக்கும் உள்ள ஒற்றுமைகளும் தனித்தன்மைகளும், 5. இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களிடம் பாரதிதாசனின் தாக்கம் என்னும் தலைப்புகளில் இயல்கள் பகுக்கப்பட்டுள்ளன.

  தமிழகத்தின் முன்னணிக் கவிஞர்களின் படைப்புகள், பணிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் பட்டியல் ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்களின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன. இருபதாம் நூற்றாண்டு மரபுக்கவிதைகள் குறித்து அறிய விரும்புபவருக்கும் ஆராய விரும்புபவருக்கும் அரிய தகவல்களைத் தரும் களஞ்சியமாக இந்த நூல் விளங்குகின்றது.

வெளியீடு:

முகிலரசி வெளியீடு
31, கொல்லப்பாளையம்,
ஆர்க்காடு - 632 503, வேலூர் மாவட்டம்

பக்கம்: 248
விலை: 100 உருவா

கருத்துகள் இல்லை: