நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 15 செப்டம்பர், 2017

புதுச்சேரியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு விழா




அன்புடையீர், வணக்கம்.

தமிழ் மாமுனிவராக விளங்கிய தவத்திரு விபுலாநந்த அடிகளார் துறவியாகவும், கல்வியாளராகவும், பேராசிரியராகவும், இதழாசிரியராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், மாந்தநேயம்கொண்ட மாமனிதராகவும் விளங்கியவர். யாழ்நூல் இயற்றித் தமிழர்களின் நெஞ்சங்களுள் நிலைத்த இடம்பிடித்தவர். இலங்கை முதல் இமயமலை வரையிலும் பரவிக் கிடந்த இவர்தம் பணிகளைத் திரட்டி, விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் என்னும் பெயரில் அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றினை முனைவர் மு.இளங்கோவன் ஆவணப்படமாக்கியுள்ளார். அடிகளாருடன் தொடர்புடைய அறிஞர்கள், உறவினர்கள், அடிகளாரின் பணிகளை அறிந்த சான்றோர்களை நேர்காணல் செய்தும், தக்க ஆவணங்களின் துணையுடனும் கலைநேர்த்தியுடன்  உருவாக்கப்பட்டுள்ள விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் அறிஞர்கள், கலை இலக்கிய ஆர்வலர்களின் முன்னிலையில் வெளியீடு காண உள்ளது. மக்கள் தொலைக்காட்சியின் சிறப்பு அறிவுரைஞர் சீர்மிகு சௌமியா அன்புமணி அவர்கள் ஆவணப்படத்தை வெளியிட்டு வாழ்த்துரை வழங்க உள்ளார்கள். இந்த ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வில் தாங்களும் தங்கள் நண்பர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

தங்கள் வருகையை எதிர்நோக்கும்

வயல்வெளித் திரைக்களத்தினர்

நாள்: 16.09.2017(சனிக்கிழமை)
நேரம்: மாலை 6. 00 மணி முதல் 8.30 மணி வரை
இடம்: செயராம் உணவகம், புதுச்சேரி

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து: கலைமாமணி கா. இராஜமாணிக்கம்
வரவேற்புரை: தியாகி பாவலர் அப்துல் மஜீத்
தலைமையுரை: தவத்திரு சிவஞானபாலய சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம்

ஆவணப்படம் வெளியீடு: சீர்மிகு சௌமியா அன்புமணி,
சிறப்பு அறிவுரைஞர், மக்கள் தொலைக்காட்சி

ஆவணப்படத்தின் முதலிரு படிகளைப் பெறுதல்:
திரு. இரா. இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர், புதுச்சேரி
திரு. கே.பி.கே. செல்வராஜ், தலைவர், திருப்பூர் முத்தமிழ்ச்சங்கம்

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையிடல்:

வாழ்த்துரை:
முனைவர் வி.முத்து, தலைவர், புதுவைத் தமிழ்ச்சங்கம்
கவிஞர் இரவி சுப்பிரமணியம், ஆவணப்பட இயக்குநர்
முனைவர் இளமதி சானகிராமன், புதுவைப் பல்கலைக்கழகம்
முனைவர் ஒப்பிலா. மதிவாணன், சென்னைப் பல்கலைக்கழகம்
முனைவர் அரங்க. பாரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
முனைவர் வசந்தகுமாரி, இயக்குநர்,பட்டமேற்படிப்புமையம், புதுச்சேரி அரசு
முனைவர் இரா. நிர்மலா, தமிழ்த்துறைத் தலைவர், பட்டமேற்படிப்புமையம்
திரு. அருள்வேந்தன் பாவைச்செல்வி, தலைவர், திருவண்ணாமலைத் தமிழ்ச்சங்கம்

ஆவணப்படம் மதிப்பீட்டுரை: எழுத்தாளர் ஜெயபாஸ்கரன், சென்னை

 கலைஞர்களைச் சிறப்பித்தல்: திரு. க. குணத்தொகையன், புதுச்சேரி

நிகழ்ச்சித்தொகுப்புரை: கவிஞர் உமாமோகன்

நன்றியுரை: திரு. தூ. சடகோபன்

அனைவரும் வருக!

தொடர்புக்கு: 9442029053 / 9442172364 /

கருத்துகள் இல்லை: