நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 15 மே, 2017

திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தின் ஆவணப்பட, குறும்பட விருதுகள் விழா



மு.இ,, ’லாக்கப்’ நாவலாசிரியர் ஆட்டோ சந்திரா, சுப்ரபாரதிமணியன், இரவி

திருப்பூரில் 14.05.2017 (ஞாயிறு) காலை 10 மணிக்கு நடைபெற்ற ஆவணப்பட, குறும்பட விருது, சக்தி விருது வழங்கும் விழாவிற்குச் சென்றிருந்தேன். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் நிகழ்ச்சியைச் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார். தமிழகத்தின் சிறந்த படைப்பாளிகள் கலந்துகொண்ட நிகழ்வாக இது இருந்தது.

திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தின் பொறுப்பாளர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு படைப்பாளிகளைப் போற்றி விருதளித்தும், உரையாற்றச் செய்தும் சிறப்புச் செய்தனர். சென்னையிலிருந்து எழுத்தாளர் இந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். திருப்பூரில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றும் கவிஞர்  சின்னசாமி இ.ஆ.ப. அவர்களும் கலந்துகொண்டு படைப்புகள் குறித்து உரையாற்றினார்.

திரு. தங்கவேலன், ’லாக்கப்’ புதினம் எழுதிய ஆட்டோ சந்திரா(கோவை), பேராசிரியர் மணிவண்ணன், தங்கவேலன், கோவை அரவிந்தன், மு.இளங்கோவன் உள்ளிட்ட படைப்பாளிகள் கலந்துகொண்டு கலை இலக்கியப் போக்குகள், தங்கள் படைப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். வழக்கறிஞர் இரவி உள்ளிட்ட எழுத்தாளர்கள் நிகழ்ச்சி சிறப்பாக அமைவதற்குப் பின்புலமாக இருந்தனர்.

பெண் படைப்பாளர்களுக்குச்  சக்தி விருது வழங்கப்பட்டது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பெண் படைப்பாளர்கள் வந்திருந்தனர்.  தங்கள் படைப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். எழுத்தாளர் சுந்தரபுத்தன், திருவையாறு சௌந்தர் உள்ளிட்ட நண்பர்களைக் காணும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. கலை இலக்கியப் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் விழாவாகவும் சமகாலத்தின் கலை இலக்கியப் போக்குகளை அறிந்துகொள்ளும் விழாவாகவும் இது இருந்தது. 

லாக்கப் நாவலாசிரியர் ஆட்டோ சந்திராவின் அன்பில்...


கருத்துகள் இல்லை: