நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 12 ஏப்ரல், 2017

உலகத் தொல்காப்பிய மன்றம் தொடர்பொழிவு 10, எழுத்தாளர் ம. செயராம சர்மாவுக்குப் பாராட்டுவிழா!





அன்புடையீர்! வணக்கம்.

தமிழின் சிறப்புரைக்கும் ஒல்காப் பெரும்புகழுடைய தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இம்மன்றத்தின் கிளைகள் பல நாடுகளிலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ளன. உலகத் தொல்காப்பிய மன்றத்தின் புதுச்சேரிக் கிளையின் சார்பில் நடைபெறும் தொல்காப்பியம் தொடர்பொழிவு நிகழ்விற்கும், ஆத்திரேலியாவிலிருந்து வருகைபுரியும் எழுத்தாளர் செயராம சர்மா அவர்களுக்கு நடைபெறும் பாராட்டு நிகழ்விற்கும் வருகை தந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

நாள்: 14.04.2017, வெள்ளிக் கிழமை, நேரம்: மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை

இடம்: செகா கலைக்கூடம், 119,  நீட இராசப்பையர் தெரு, புதுச்சேரி

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து: ’வில்லிசைவேந்தர்’ இ. பட்டாபிராமன்
வரவேற்புரை: முனைவர் ப. பத்மநாபன்
அறிமுகவுரை: முனைவர் மு.இளங்கோவன்
தலைமை: முனைவர் சிவ. மாதவன்
சிறப்புரை: தமிழாகரர் தெ. முருகசாமி
     
தலைப்பு: தமிழ் இலக்கியங்களில் தொல்காப்பியத்தின் தாக்கம்

பாராட்டுப் பெறுவோர்: எழுத்தாளர் ம. செயராம சர்மா, ஆத்திரேலியா

நன்றியுரை: முனைவர் இரா. கோவலன்

அனைவரும் வருக!

அழைப்பில் மகிழும்
உலகத் தொல்காப்பிய மன்றம்,
புதுச்சேரி – 605 003

தொடர்புகொள்ள: 

முனைவர் ப. பத்மநாபன் + 9443658700 / 
முனைவர் மு.இளங்கோவன் + 9442029053

கருத்துகள் இல்லை: