நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 6 ஜூலை, 2015

திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்






  22015 செப்டம்பர் மாதம் 22.09.2015 அன்று திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம் முதுகலைத் தமிழாய்வுத்துறை, சார்பில் நடைபெற உள்ளது.

தமிழ்ச் சமூகம் - கலாச்சாரம் - கல்வி – வணிகம் - இலக்கியங்களில் தகவல் தொடர்புச் சாதனங்களின் தாக்கமும் மாற்றமும் என்ற தலைப்பில் நடைபெறும் இப் பன்னாட்டுக் கருத்தரங்கில். பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் கலந்துகொண்டு ஆய்வுரை வழங்கலாம்.

ஆய்வார்வம் கொண்டோர் கலந்துகொண்டு கட்டுரை படிக்க அனைவரையும் முதுகலைத் தமிழாய்வுத்துறையினர் அழைக்கின்றனர்.


  • ஆய்வுக்கட்டுரை ஏ 4 தாளில் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • பாமினி எழுத்துருவில் தட்டச்சிட்டு மின்னஞ்சலில் கட்டுரையை அனுப்பலாம்
  • பேராளர் கட்டணம் உருவா: 750 – 00 (அயல்நாட்டினருக்கு 12 டாலர்)
  • ஆய்வாளர்கள் உருவா – 500 -00 (அயல்நாட்டினர் 8 டாலர்)
  • கட்டணம், கட்டுரை அனுப்ப இறுதிநாள்: 01.09.2015

பேராளர் கட்டணம் திருச்சிராப்பள்ளியில் மாற்றும் வகையில் வரைவோலையாக Head, Department of Tamil, Jamal Mohamad College, Trichirapalli என்ற பெயரில் அனுப்பலாம்.

தொடர்புக்கு:

முனைவர் க. சிராஜூதீன்,
துணைப்பேராசிரியர்,
முதுகலை - தமிழாய்வுத்துறை,
ஜமால் முகமது கல்லூரி,
திருச்சிராப்பள்ளி – 620  020

தொலைபேசி: 0091 98657 21142
Jmctins2015@gmail.com

1 கருத்து:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

கருத்தரங்க அழைப்புக்கு நன்றி.