நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

முதன்மொழி இதழுக்கு நன்றி!




மொழிஞாயிறு பாவாணர் அவர்களும் அவர்தம் பற்றாளர்களும் உலகத் தமிழ்க் கழகம் என்ற அமைப்பை உருவாக்கித் தமிழ், தமிழர் மேம்பாட்டுக்கு உழைத்தனர் என்பதை நாம் அறிவோம். அவர்களால் உருவாக்கப்பட்ட உலகத் தமிழ்க் கழகம் பாவாணரின் மறைவுக்குப் பிறகும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. அண்மைக் காலமாகப் பாவாணர் பற்றாளர்கள் ஒன்று கூடி அமைப்பைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் கிளைகள் தொடங்கப்பட்டுப் பணிகள் திட்டமிடப்பட்டு, சிறப்பாக நடந்துவருகின்றன.

உலகத் தமிழ்க் கழகம் சார்பில் வெளிவரும்  முதன்மொழி இதழ், இம்மாத இதழை இசைப்பேரறிஞர் ப. சுந்தரேசனார் நூற்றாண்டுச் சிறப்பு இதழாக வெளியிட்டு வழங்கியுள்ளமை இசையார்வலர்களுக்குப் பெரும் விருந்தாகும். அட்டைப்படத்தில் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களின் படம் இடம்பெற்றுள்ளமை பாராட்டிற்கு உரிய ஒன்றாகும். இந்த இதழில் இசையறிஞர் குடந்தை. பசுந்தரேசனார் அவர்களின் இசைப்பணிகளும் வாழ்வியலும் அறிஞர்களால் நினைவுகூரப்பட்டுள்ளன.

தமிழார்வம் கொண்ட உலகத் தமிழ் அன்பர்கள் முதன்மொழியை வாங்கி உதவலாம். புரவலர்களாகித் தமிழ்த்தொண்டு செய்யலாம்.

தொடர்புக்கு:

முனைவர் ந. அரணமுறுவல்
ஆசிரியர், முதன்மொழி,
726, பாவாணர் தெரு, முல்லை நகர், மேற்குத் தாம்பரம்,
சென்னை- 600 045

செல்பேசி: + 94442 03349

கருத்துகள் இல்லை: