நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 3 டிசம்பர், 2014

வேலூர் த.கி.மு.(DKM) மகளிர் கல்லூரியில் தன்னாட்சிக் கல்லூரிகளின் தர மேம்பாடு குறித்த தேசிய அளவிலான பயிற்சிவகுப்பு



வேலூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கல்லூரியான தனபாக்கியம் கிருட்டினசாமி முதலியார் மகளிர் கல்லூரியில், தன்னாட்சிக் கல்லூரிகளின் தர மேம்பாடு குறித்த பேராசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு நவம்பர் 29, 30 ஆகிய இருநாள் நடைபெற்றது.

நிறைவுநாளில் நான் கலந்துகொண்டு உயர்கல்வித் தர மேம்பாட்டில் தகவல்தொழில் நுட்பத்தின் பங்கு என்ற தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பு அமைந்தது. இன்றைய உலகத்துக் கல்விமுறைகள் குறித்தும் இந்தியக் கல்வி முறை குறித்தும், தமிழகத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களின் கல்விமுறை குறித்தும் பேராசிரியர்களுக்கு என் கருத்துகளை எடுத்துரைத்தேன்.

இணையத்தளங்கள், மின்னூல்கள், மின்னிதழ்கள் கல்வி வளர்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும் எந்த எந்த வகையில் துணைநிற்கின்றன என்று என் உரையை அமைத்தேன். தமிழ்த்தகவல்கள் எந்த எந்த இணையத்தளங்களில் உள்ளன என்றும் குறிப்பிட்டேன். பிறதுறை சார்ந்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்படும் தகவல்கள் எந்த எந்த இணையத்தளங்களில் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டேன். இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்டத்தின் பல கல்லூரிகளிலிருந்து பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

ஆந்திர மாநிலம், குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்திலிருந்து பேராசிரியர் முனைவர் இராக. விவேகானந்தகோபால் அவர்கள் சிறப்புப் பார்வையாளராக வருகை தந்திருந்தார். கல்லூரிச் செயலாளர் பொறியாளர் டி. மணிநாதன் அவர்கள் வருகை தந்து என் உரையைக் கேட்டு ஊக்கப்படுத்தினார்கள்.


கல்லூரி முதல்வர் முனைவர் பி. என். சுதா அவர்கள் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. முனைவர் பத்மஜா அவர்களும் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் ஞா. சுஜாதா அவர்களும் கல்லூரியின் பல்வேறு துறைப் பேராசிரியர்களும் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தனர். 

இந்தப் பயிற்சி வகுப்பில் என்னிடம் முன்பே கல்லூரிகளில் படித்தவர்கள், பேராசிரியர்களாக உயர்ந்து அமர்ந்திருந்தமை மகிழ்ச்சியளித்தது.






படங்கள் உதவி: ஒளி ஓவியர் இரமேஷ் பாபு, வேலூர்

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

//தங்களின் மாணவர்கள் இன்று பேராசிரியர்கள்///
அசிரியர் பணியின் மகத்துவம்