நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் மகள் வசந்தா தண்டபாணி மறைவு

வசந்தா தண்டபாணி

பாவேந்தரின் அன்புமகள் வசந்தா தண்டபாணி அவர்கள் தம் 84 ஆம் அகவையில் புதுச்சேரியில் 13.08.2014 பிற்பகல் இரண்டு மணியளவில் இயற்கை எய்தினார். இன்று 14.08.2014 வியாழன், முற்பகல் 11 மணியளவில் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. வசந்தா அம்மா அவர்களின் உடல் புதுச்சேரி முத்தியால்பேட்டை, வசந்தம் நகரில் உள்ள மருத்துவர் சேரன் இல்லத்தில் பொதுமக்கள் வணக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழ் ஆர்வலர்கள், பாவேந்தர் பற்றாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் இறுதி வணக்கம் செலுத்தி வருகின்றனர்.
                           

வசந்தா அம்மா அவர்களைப் பலவாண்டுகளாக நான் நன்கு அறிவேன். தனித்துப் பலமுறை உரையாடியுள்ளேன். உவமைக்கவிஞர் சுரதா அவர்கள் கலந்துகொண்டு எனக்குப் பாவேந்தர் மரபுப்பாவலர் பட்டம் சென்னையில் வழங்கியபொழுது அம்மா வசந்தா தண்டபாணி அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள். அந்த அரிய படம் ஒன்று  இருப்பில் இருந்தது. கூடுதல் படங்களைப் பிறகு பார்வைக்கு வைப்பேன்.

உவமைக்கவிஞர் சுரதா, மு.இ., வசந்தா அம்மா

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா