நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

பேராசிரியர் இரா.ச. குழந்தைவேலனார் அறக்கட்டளை இண்டாம் ஆண்டுப் பெருவிழா கடலூரில் நடைபெறுகின்றது!


  பேராசிரியர் இரா.ச. குழந்தைவேலனார் அறக்கட்டளை நடத்தும் இண்டாம் ஆண்டுப் பெருவிழா கடலூர் சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் 03.08.2014 மாலை 5.30 மணிக்கு நடைபெறுகின்றது. இந்த விழாவில் திருவருட்பாவில் வாழ்வியல் நெறிகள் என்னும் தலைப்பில் அமைந்த நூலின் வெளியீடு நடைபெற உள்ளது.

  திருவருட்பா இசைத்தலுடன் தொடங்கும் விழாவில் முனைவர் விசயலெட்சுமி வெற்றிவேல் எழுதிய திருவருட்பாவில் வாழ்வியல் நெறிகள் என்னும் நூல் வெளியிடப்படுகின்றது. கவிஞர் இரா. ச. சொக்கநாதன் தலைமையில்  நடைபெறும் விழாவில் பேராசிரியர் இரா.ச. குழந்தைவேலனார் அவர்கள்  அறிமுகவுரையாற்றுகின்றார். நூலினை வெளியிட்டு வாழ்த்துரை வழங்க தவத்திரு ஊரன் அடிகளார் இசைந்துள்ளார். நூலின் முதற்படியினைப் புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர் வி. முத்து அவர்கள் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்குவார். 

  இந்த விழாவில் விருதுகள் வழங்கியும் பாராட்டுப் பட்டயம் வழங்கியும் சிறப்புப் பேருரையாற்ற முனைவர் ஔவை. நடராசன் அவர்கள் இசைந்துள்ளார். தமிழார்வலர்கள் திரளாகக் கலந்துகொள்ள உள்ள இந்த நிகழ்ச்சிக்கு அனைவரையும் அறக்கட்டளையினர் அழைத்து மகிழ்கின்றனர்.

கருத்துகள் இல்லை: