நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 2 ஜூன், 2014

சென்னையில் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழாக் காட்சிகள்


முனைவர் ஔவை நடராசன் தலைமையில் திரு. மோகன் குறுவட்டை வெளியிட மு. இளங்கோவன் பெற்றுக்கொள்கின்றார்.

  சென்னை, திருவான்மியூரில் அமைந்துள்ள சரசுவதி வெங்கட்ராமன் பள்ளியில் 01.06.2014 மாலை 4 மணிக்குக் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழாவைப் ப.சு. அவர்களின் மாணவர்கள் மா. வயித்தியலிங்கன், மா. கோடிலிங்கம் ஏற்பாடு செய்து நடத்தினர். 

  முனைவர் ஔவை நடராசன் ஐயா தலைமையில் நடைபெற்ற இந்த நூற்றாண்டு விழாவில் குடந்தை ப.சுந்தரேசனார் பாடல்கள் அடங்கிய குறுவட்டு வெளியிடப்பட்டது. திரு. மோகன் அவர்கள் வெளியிட மு. இளங்கோவன் பெற்றுக்கொண்டார். திரு. மோகன், பேராசிரியர் மா. வயித்தியலிங்கன், திரு. மா. கோடிலிங்கம், பேராசிரியர் செல்வகணபதி, திரு. விசய திருவேங்கடம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினர். களக்காடு சீதாலெட்சுமி அவர்களின் பண்ணிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.


இறைவாழ்த்து திரு. மா. கோடிலிங்கம்


குறுவட்டினைப் பெறும் காட்சி


முனைவர் ஔவை நடராசன் தலைமையுரை


முனைவர் மு.இளங்கோவனின் முயற்சியைப் பாராட்டும் விழாக்குழுவினர்

கருத்துகள் இல்லை: