நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

பொதிகை தொலைக்காட்சியில் திருவதிகைத் திருக்கோயில்…




பொதிகை தொலைக்காட்சியில் திருவதிகைத் திருக்கோயில் ( கடலூர் மாவட்டம் பண்ணுருட்டி அருகில் உள்ளது) பற்றிய நிகழ்ச்சி 26. 04. 2014 ( சனிக்கிழமை) இந்திய நேரம் பகல் 2 மணி முதல் 2.30 வரை ஒளிபரப்பாக உள்ளது. புதுவைக் களஞ்சியம் என்ற சிறப்பு நிகழ்ச்சியாக இது ஒளிபரப்பாகின்றது. உலகின் அனைத்துப் பகுதியிலிருந்தும் இதனைப் பார்த்து மகிழலாம். இணையத்திலும் இதனை நேரலையாகப் பார்க்க இயலும்.

இணையத்தின் வழியாகப் பார்க்க: 





இந்த நிகழ்ச்சியில் நாட்டியம் தொடர்புடைய 108 கரணங்களை நினைவுகூரவும், அப்பர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசரின் அருள் வாழ்வை நினைவுகூரவும் எனக்கு வாய்ப்பு அமைந்தது. நண்பர்கள் பலர் இதில் பங்கேற்றுள்ளனர். யார்? யார் என்பதைத் தாங்கள் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

கருத்துகள் இல்லை: