நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 4 மார்ச், 2013

வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியர்கள் சந்திப்பு


இசுலாமியாக் கல்லூரி முதல்வரும், பேராசிரியர்களும்


பேராசிரியர் க.பிரேம்நசீர்,  தமிழ்த்துறைத் தலைவர் ப.சிவராஜி, எழுத்தாளர் வசந்தநாயகன்

வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியின் தமிழ்த்துறையின் அழைப்பின்பேரில் தமிழகத்தின் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களிலிருந்து தமிழ்ப்பேராசிரியர்கள் இசுலாமியாக் கல்லூரியில் ஒன்றுகூடித் தமிழ்ப் பாடத்திட்டங்கள் குறித்து அண்மையில் கலந்துரையாடினர். நிறைவாகக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் க. பிரேம்நசீர் அவர்களைச் சந்தித்துத் தமிழ்த்துறை வளர்ச்சி குறித்துக் கலந்துரையாடினர்.

கருத்துகள் இல்லை: