நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 23 மார்ச், 2013

திருவாரூர் வேலுடையார் கல்வியியல் கல்லூரி இணையப் பயிலரங்கம் இனிதே தொடங்கியது..


 பங்கேற்பாளர்கள்

பங்கேற்பாளர்கள்
 திருவாரூர் வேலுடையார் கல்வியியல் கல்லூரியில் இணையப் பயிலரங்கம் இன்று(23.03.2013) காலை 10 மணிக்கு இனிதே தொடங்கியது. இந்த நிகழ்ச்சிகான ஏற்பாட்டை இலக்கிய வளர்ச்சிகழகம் முன்னெடுத்தது. வேலுடையார் கல்வியியல் கல்லூரியின் தாளாளர் திரு.தியாகபாரி அவர்கள் தலைமையில் தொடக்கவிழா நடைபெற்றது. திருவாரூர் சார்ந்த தமிழ் உணர்வாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.  வழக்கறிஞர் அ.அருள்மொழி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இணையதளம் ஆக்கமும் ஆபத்தும் என்ற தலைப்பில் உரையாற்றினார். புதுவை மு.இளங்கோவன் கலந்துகொண்டு கல்வியியல், ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட மாணவிகளுக்குப் பயிற்சி வழங்கினார். மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். தமிழ் உணர்வாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
திரு.தியாகபாரி அவர்கள் தலைமையுரை
பங்கேற்பாளர்கள்
தமிழ் உணர்வாளர்கள்
இணையப் பயிலரங்கத்தின் காட்சி


 பயிலரங்கக் காட்சிகள்

கருத்துகள் இல்லை: