நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 23 பிப்ரவரி, 2013

பார்க்சு கல்லூரியின் தமிழ் இணையப் பயிலரங்கம் இனிதே தொடங்கியது…





கல்லூரி முதல்வர் திருமாறன் அவர்கள் வாழ்த்துரை

திருப்பூர் பார்க்சு கல்லூரியில் தேசிய அளவிலான தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று 23.02.2013 காலை 10 மணிக்குத் தொடங்கியது. மாலை 5.மணி வரை நடைபெறும்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

பார்க்சு கல்லூரியின் செயலாளர், திரு. பெ. இரகுராஜன் அவர்கள் தலைமையில் பயிலரங்கத் தொடக்க விழா நடைபெற்றது. பேராசிரியர் மு. சாமிசுந்தரம் அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார்.

பார்க்சு கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் ஜெ. திருமாறன் அவர்கள் தமிழ் இணையத்தின் தேவையை வலியுறுத்தி வாழ்த்துரை வழங்கினார்
திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர், திரு. கே.பி.கே.செல்வராசு அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.

புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் பயிலரங்கத்தின் நோக்கம், பயிலரங்கின் வழியாக இதுவரை நடந்துள்ள முயற்சிகளை எடுத்துரைத்துத் தமிழ் இணையத்தை அறிமுகப்படுத்தி உரையாற்றி வருகின்றார்.

திரளாக மாணவர்கள், ஆய்வு மாணவர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: