நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 26 செப்டம்பர், 2012

குமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்




சென்னை, அடையாறில் அமைந்துள்ள குமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் 28.09.2012 வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற உள்ளது.

தொடக்க விழாவில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கர்னல், முனைவர் க.திருவாசகம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பயிலரங்கத்தைத் தொடங்கி வைக்க உள்ளார்.

குமாரராணி மீனா முத்தையா கல்லூரியின் தாளாளர் முனைவர் மீனா முத்தையா அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்க உள்ளார்.

சென்னை மாநிலக் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்கள் வாழ்த்துரை வழங்கவும், கல்லூரி முதல்வர் முனைவர் பி.டி.விஜய்ஸ்ரீ அவர்கள் வரவேற்புரையாற்றவும் உள்ளனர்.

பயிலரங்க நிறைவு விழாவில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பயிற்சி பெற்றவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்புரையாற்ற உள்ளார்.

பயிலரங்கம் குறித்த ஆய்வறிக்கையைக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் சீ.சாந்தா அவர்கள் வழங்குவார்.

முனைவர் மு.இளங்கோவன்( பாரதிதாசன் அரசு மகளிர்கல்லூரி, புதுச்சேரி), முனைவர் ஆர்.கிருட்டிணமூர்த்தி (கணினிப்பொறியியல் பேராசிரியர் (பணிநிறைவு), அண்ணா பல்கலைக்கழகம்)

ஆகியோர் தமிழ் இணையம் பற்றியும் தமிழ் மென்பொருள்கள் பற்றியும் உரை நிகழ்த்துவர்.

தொடர்புக்கு :
 முனைவர் சீ.சாந்தா,
தமிழ்ப்பேராசிரியர்,
குமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரி, 
4, கிரசென்ட் அவென்யூ சாலை, அடையாறு, சென்னை- 600 020
 9962426445

கருத்துகள் இல்லை: