நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

புதுச்சேரியில் கவிஞர் தமிழ் ஒளி பிறந்தநாள் விழா

அழைப்பிதழ்

புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத்துறை, தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தின் சார்பில் புகழ்பெற்ற கவிஞர் தமிழ் ஒளி அவர்களின் 89 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா புதுச்சேரியில் நடைபெறுகின்றது. இடம்: நியூ பாரிசு மகால்,கருவடிக்குப்பம்,புதுச்சேரி நாள்: 21.09.2012, நேரம் பிற்பகல் 3 மணி முதல் தொடக்க விழாவின் தலைமை: மாண்புமிகு தி.தியாகராசன் அவர்கள் (மின்துறை,கல்வி, கலை, பண்பாட்டுதுதறை அமைச்சர், புதுவை அரசு) வாழ்த்துரை: திரு.வெ.வைத்திலிங்கம் அவர்கள், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு.ஸ்ரீகாந்த் இ.ஆ.ப. அவர்கள் அறுபது கவிஞர்கள் பங்கேற்கும் கவியரங்கம், கருத்தரங்கம் நடைபெறும். சிறப்புரை முனைவர் வீ.அரசு. சென்னைப் பல்கலைக்கழகம். அனைவரும் கலந்துகொண்டு மறைந்த கவிஞரின் புகழ்பாடலாம்.

கருத்துகள் இல்லை: