நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 20 செப்டம்பர், 2012

கானல் காடு நாவலாசிரியர் விருத்தாசலம் தெய்வசிகாமணி மறைவு!


திருமுதுகுன்றம் எனப்படும் விருத்தாசலத்தில் ஆசிரியர் பணியாற்றியவரும், நடவு இதழின் ஆசிரியரும், கானல் காடு என்ற பெயரில் கொடுக்கூர் ஆறுமுகம் அவர்களின் வாழ்க்கையை நாவலாக எழுதியவருமான எழுத்தாளர் தெய்வசிகாமணி அவர்கள்(ஜி.டி) 20.09.2012 அன்று இரவு 7.15 மணியளவில் விருத்தாசலத்தில் மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிவிக்க வருந்துகின்றேன். அவரைப் பிரிந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல். தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்கம் உள்ளிட்ட பல இலக்கிய அமைப்புகளில் ஈடுபட்டுத் தமிழிலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபட்டவர் இவர்.

கருத்துகள் இல்லை: