நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 10 ஜூன், 2012

மதுரையில் தமிழ் இணையப் பயிலரங்கம்

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் சிறப்புற நடைபெற உள்ளது.


நாள் : 17.06.2012, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 9.30 முதல் மாலை 5.30 வரை
இடம் : மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, பசுமலை, மதுரை-3

தஞ்சை வல்லம்- பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தின் - ஊரக வளர்ச்சி உயராய்வு மையமும், மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியும் பகுத்தறிவாளர் கழகமும், இணைந்து தமிழ் இணையப் பயிலரங்கத்தை நடத்துகின்றன.

தமிழ் இணையப் பயிலரங்கத்தில் கலந்துகொண்டு பயிற்சி பெற, குறிப்பிட்ட இடங்களே இருப்பதால் முதலில் பதிபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பயிற்சி அளிக்கப்படும். மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட பகுத்தறிவாளர் கழகம்சார்ந்த அமைப்புக்களை சேர்ந்தவர்கள் பயன்பெறும்படி நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புக்கு:

வா. நேரு, 9443571371
வே.செல்வம், 9843346346,
மீ.அழகர்சாமி, 9245289949

கருத்துகள் இல்லை: