நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 19 மே, 2012

பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தில் இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கம்


இ.ப.த.மன்றக் கருத்தரங்கில் தமிழறிஞர்கள்


கருத்தரங்க ஆய்வுக்கோவையை வெளியிடல்

பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தில் இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கம் இன்று(19.05.2012) காலை11 மணிக்குத் தொடங்கியது.

பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் மு.மீனாட்சிசுந்தரம் அவர்கள் வரவேற்புரையாற்றினார். பேராசிரியர் இரா.சீனிவாசன் அவர்கள் அறிமுகவுரையாற்றினார். இ.ப.த.மன்றத் தலைவர் இரா.மோகன் அவர்கள் தலைமையுரையாற்றினார்.

பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அரியதோர் வாழ்த்துரை வழங்கினார். முதுபெரும் தமிழறிஞர் தமிழூர் ச.வே.சுப்பிரமணியன் ஐயா அவர்கள் தம் தமிழ்ப்பணிகளை நினைவுகூர்ந்து வாழ்த்துரை வழங்கினார். மலேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் வே.சபாபதி அவர்களும், சிங்கப்பூர் பல்கலைக்கழகப் பேராசிரியர் சீதாலெட்சுமி அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினர். நந்தினி குழும உரிமையாளர் ஆர்.இரவிச்சந்திரன் அவர்களும் பெங்களூர் வாழ் தமிழ் ஆர்வலர்கள் பலரும் வாழ்த்திப் பேசினர்.

ஆய்வுக்கோவைத் தொகுதிகள், மற்றும் சிறப்பு மலர் விழாவில் வெளியிடப்பட்டது.
நிறைவில் பேராசிரியர் மு.மணிவேல் நன்றிகூறினார்.

பகலுணவுக்குப் பிறகு பேராளர்கள் கலந்துகொண்டு கட்டுரை வழங்கினர். நாளையும் கருத்தரங்கு தொடர்ந்து நடைபெறுகின்றது.

நாளை மாலை நிறைவு விழா நடைபெறும். இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள்,ஆய்வாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.


கருத்தரங்கில் பங்கேற்ற பேராளர்கள்


கருத்தரங்கில் பங்கேற்ற பேராளர்கள்


பெங்களூர் திருவள்ளுவர்சிலை அருகில் மு.இளங்கோவன், பேராசிரியர் கனல்மைந்தன், வெள்ளையாம்பட்டு சுந்தரம், பேராசிரியர் ச.பொ.சீனிவாசன்

கருத்துகள் இல்லை: