நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 15 மே, 2012

பேராசிரியர் சுப.வீரபாண்டியனின் 5 நூல்கள் வெளியீட்டு விழா




பேராசிரியர் சுப.வீரபாண்டியன் எழுதிய திராவிடத்தால் எழுந்தோம், குறள்வானம்(அறத்துப்பால்), கவிதா(புதினம்), வந்ததும் வாழ்வதும் (தன்வரலாறு), பெரியாரின் இடதுசாரித் தமிழ்த்தேசியம் என்னும் ஐந்து நூல்கள் இன்று(15.05.2012) மாலை ஆறு மணிக்குச் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராசர் அரங்கில் வெளியீடு காண உள்ளன.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நூல்களை வெளியிட்டுச் சிறப்புப் பேருரையாற்ற உள்ளார். தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் முன்னிலையில் நடைபெறும் விழாவில் நடுவண் அமைச்சர் சா.செகத்ரட்சகன் அவர்கள் நூலின் முதற்படிகளைப் பெறவும், மேனாள் துணைவேந்தர் ஔவை நடராசன், பேராசிரியர் அப்துல்காதர் ஆகியோர் கருத்துரை வழங்கவும் உள்ளனர். நிறைவில் பேராசிரியர் சுப.வீ அவர்கள் ஏற்புரையாற்றுவார்.

கருத்துகள் இல்லை: