நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 29 நவம்பர், 2011

வாணியம்பாடி பாரதி தமிழ்ச்சங்கம் ஆண்டுவிழா

வாணியம்பாடியில் தமிழ்ப்பணியாற்றிவரும் இலக்கிய அமைப்புகளுள் பாரதி தமிழ்ச்சங்கம் குறிப்பிடத்தக்க அமைப்பாகும். இசுலாமியாக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப.சிவராஜி அவர்கள் தலைமையில் இயங்கும் இந்த அமைப்பின் நான்காம் ஆண்டு ஆண்டு விழா மலர்வெளியீடு, பரிசளிப்பு, பாட்டரங்கம், நாடகம், நூல்வெளியீடு என்று பல நிகழ்வுகளைக் கொண்டு நடைபெற உள்ளது.

நாள்: 11.12.2011 ஞாயிறு
நேரம்: காலை 10 மணிமுதல் இரவு 10 மணி வரை

இடம்: கே.பி.எஸ். மகால், கோட்டை, வாணியம்பாடி

நிகழ்ச்சித் தலைமை: சி.ஸ்ரீதரன்(தொழிலதிபர்)

முன்னிலை: ஜெ.விஜய் இளஞ்செழியன், ஏ.ரியாஸ் அகமது, மு.இராமநாதன்

வரவேற்புரை: இரா.முல்லை

பாட்டரங்கத் தலைமை: முனைவர் கோவை சாரதா

பங்கேற்பு: சுரேந்திரன், அன்பரசு, மலர்விழி

பாரதி வருகிறார் நாடகம் இயக்கம் முனைவர் கி.பார்த்திபராஜா

"விடுதலைக்கு வித்திட்ட வாணியம்பாடிச் செம்மல்கள்"
நூல்வெளியீடு: பேராசிரியர் அப்துல்காதர்

முதற்படி பெறுதல் பாரதி கிருஷ்ணகுமார்

நூல் அறிமுகம் முனைவர் மு.இளங்கோவன்

நூல்படி பெறுவோர்:
மேனாள் அமைச்சர் ஆர்.வடிவேல்
ஜி.சக்கரவர்த்தி,டி.கே.இராஜா உள்ளிட்டோர்.

அனைவரும் வருக!
அழைத்து மகிழ்வோர்

வாணியம்பாடி பாரதி தமிழ்ச்சங்கம்

கருத்துகள் இல்லை: