நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 11 அக்டோபர், 2011

புதுவை ஆச்சார்யா மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ் இணையம் அறிமுக விழா


அழைப்பிதழ்

புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற கல்விநிறுவனமான ஆச்சார்யா மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தமிழ் மன்றக் கருத்தரங்க விழா 12.10.2011 காலை 11 மணிக்குக் கல்லூரியின் கலையரங்கில் நடைபெற உள்ளது.

கல்லூரி முதல்வர் திரு.மு.முகமது ஷா அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் பேராசிரியர் மு.செந்தமிழ்க்கோ அவர்கள் வரவேற்புரையாற்றுகின்றார்.

முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் தமிழ் மன்றக் கருத்தரங்க விழாவில் கலந்துகொண்டு இணையமும் தமிழும் என்ற தலைப்பில் தமிழ் இணையத்தின் பல்வேறு பயன்பாடுகளை விளக்கி உரையாற்றுகின்றார்.

திரு.அ.வேல்முருகன் அவர்கள் நன்றியுரையாற்றுகின்றார்.

விழாவிற்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அழைத்து மகிழ்கின்றனர்.

கருத்துகள் இல்லை: