நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

நாமக்கல்லில் கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருது விழா 2011


அழைப்பிதழ்

கு.சின்னப்ப பாரதி அவர்கள் பொதுவுடைமைக் கொள்கைகளைத் தாங்கி, உழைக்கும் மக்களின் வாழ்க்கையைத் தம் புதினங்களில் இடம்பெறச் செய்தவர். நிலைத்த படைப்புகளை வழங்கி உலகப் புகழ்பெற்றவர். இவர்தம் பெயரில் அமைந்துள்ள அறக்கட்டளை சார்பில் சிறந்த நூல்கள் தேர்ந்தெடுக்கப்பெற்றுப் பணப்பரிசில் வழங்கிப் பாராட்டப்பட உள்ளன. இதற்கான விழா எதிர்வரும் அக்டோபர் இரண்டாம் நாள் (ஞாயிற்றுக் கிழமை) நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள செல்வம் பொறியியல் கல்லூரியின் கலையரங்கில் நடைபெற உள்ளது.

காலை 9.30 மணியளவில் தொடங்கும் விழாவிற்குச் செல்வம் பொறியியல் கல்லூரியின் தாளாளர் டாக்டர் பொ.செல்வராஜ் அவர்கள் தலைமை தாங்குகின்றார். இந்த விழாவில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், இதழாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். வெளிநாட்டிலிருந்தும் பல பேராளர்கள் வருகைதர உள்ளனர்.

முனைவர் பா,கவீத்ரா நந்தினி, எழுத்தாளர் அந்தோனி ஜீவா, எஸ்.பி.இராமசாமி, எஸ்.கே.சம்பத், ஆர்.செந்தில்முருகன், எஸ்.இராஜ்குமார், ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெறுகின்றது.

கா.பழனிச்சாமி வரவேற்புரையாற்றவும், ச.தமிழ்ச்செல்வன் தொடக்க உரையாற்றவும் உள்ளனர். பரிசளிப்பின் நோக்கத்தைக் கு.சின்னப்ப பாரதி விளக்கிப் பேச உள்ளார். சி.ப.கருப்பண்ணன் அவர்கள் பரிசுபெறுபவர்களை அறிமுகம் செய்து உரையாற்றுவார்.

சிறப்பு விருந்தினராகத் தினமணி நாளிதழின் ஆசிரியர் கே.வைத்தியநாதன் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். வவுனியா இரா.உதயணன், அத்திப்பள்ளி இராம மோகனராவ் (தெலுங்குமொழிப் படைப்பாளர்) ஆகியோர் விருதும் பரிசும் பெற உள்ளனர்.

சிறப்புப் பரிசிலாக வெளிநாட்டினர் பத்துப்பேரும், தமிழ்நாட்டினர் பன்னிருவரும் பரிசுபெற உள்ளனர். நாமக்கல் என்.சிவப்பிரகாசம் அவர்களுக்கு ஊழல் எதிர்ப்புச் சேவைக்கான பரிசு வழங்கப்பட உள்ளது. நூல் வெளியீடும் நடைபெறுகின்றது. சி.அரங்கசாமி நன்றியுரையாற்ற உள்ளார். விழா ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நா.செந்தில்குமார் தொகுப்புரை வழங்க உள்ளார்.


அழைப்பிதழ் (பின்பகுதி)

கருத்துகள் இல்லை: