நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 18 ஏப்ரல், 2011

திரைப்பட இயக்குநர் வ.கௌதமனின் தாயார் வ.பரஞ்சோதி அம்மாள் படத்திறப்பு விழா


வ.பரஞ்சோதி அம்மாள்

சந்தனக்காடு நெடுந்தொடர் இயக்குநரும் கனவே கலையாதே, மகிழ்ச்சி திரைப்படங்களின் இயக்குநருமான வ.கௌதமன் அவர்களின் தாயார் வ.பரஞ்சோதி அம்மாள் அவர்கள் கடலூர் மாவட்டம் பாளையம் என்னும் தம் சொந்த ஊரில் 29.03.2011 இயற்கை எய்தினார்கள். அவர்களின் படத்திறப்பு 19.04.2011 பிற்பகல் மூன்று மணிக்குப் பாளையம் என்னும் சிற்றூரில்(திட்டக்குடி அருகில்) நடைபெறுகின்றது. தமிழின உணர்வாளர்கள், கலை இலக்கிய உலகு சார்ந்த முன்னோடிகள் பலர் படத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு அன்னையாரின் நினைவைப் போற்ற உள்ளனர்.

தோழர்கள் வே.ஆனைமுத்து, பழ.நெடுமாறன், காசி ஆனந்தன், அறிவுமதி, செ.குரு, சீமான், தயாரிப்பாளர் மணிவண்ணன், சிவசக்திபாண்டியன், சி.மகேந்திரன், கொளத்தூர்மணி, பெ.மணியரசன், தி.வேல்முருகன், இராசேந்திரசோழன், ஓவியர் வீரசந்தனம் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.

கருத்துகள் இல்லை: