நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 29 ஜனவரி, 2011

பெருந்துறை மகாராசா கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்


தமிழ்த்தாய் வாழ்த்து

ஈரோடு மாவட்டம் பெருந்துறை மகாராசா இருபாலர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று(29.01.2011) காலை 10.30 மணிக்குத் தொடங்கியது. கல்லூரியின் சிறப்பு அலுவலர் பேராசிரியர் இரா.இந்திரலேகா அவர்களால் பயிலரங்கம் தொடங்கிவைக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் பா.பரமேசுவரி அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ந.மகாலட்சுமி அவர்கள் விருந்தினரை அறிமுகப்படுத்தி இணையத்தின் தேவையை வலியுறுத்திப் பேசினார். புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு
பேராசிரியர்கள்,மாணவர்களுக்குத் தமிழ் இணையத்தை அறிமுகம் செய்து உரையாற்றினார். 250 மாணவர்களுக்கு மேல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன்பெற்றனர். உணவு இடைவேளைக்குப் பிறகு பயிலரங்கம் தொடர்ந்து நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கல்லூரி நூலகர் தருமராஜ் அவர்களும் பேராசிரியர்களும் சிறப்பாகச் செய்துள்ளனர்.


கலந்துகொண்ட பேராசிரியர்கள்,மாணவர்கள்(ஒரு பகுதியினர்)

கருத்துகள் இல்லை: