நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 27 ஜனவரி, 2011

பேராசிரியர் கா.ம.வேங்கடராமையா இணையதளத் தொடக்கவிழா


 திருப்பனந்தாள் கல்லூரியின் மேனாள் முதல்வரும் கல்வெட்டியல் அறிஞரும் பன்னூலாசிரியரும் பன்மொழியறிஞருமான பேராசிரியர் கா.ம.வேங்கடராமையா அவர்களின் அறிவுக்கொடை, தமிழ்ப்பணிகளைத் தாங்கி நிற்கும் இணையதளம் தொடக்க விழா நடைபெற உள்ளது. 30.01.2011 ஞாயிறு காலை 10.30 மணிக்குத் திருப்பனந்தாள் திருமடத்தின் அதிபர் தவத்திரு. கயிலைமாமுனிவர் முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார் அவர்களின் திருக்கையால் திருப்பனந்தாள் திருமடத்தில் நடைபெறும் விழாவில் இணையதளம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

 காசித் திருமடத்தின் இணை அதிபர் தவத்திரு சுந்தரமூர்த்தித் தம்பிரான் அடிகளார் அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரைக்க உள்ளார்கள்.

 கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சுப்பிரமணியன், அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருட்டினன், பாலசுப்பிரமணியன், விசயராகவன், இரா.சுப்பராயலு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரைக்க உள்ளனர்.

 பேராசிரியர் ம.வே.பசுபதி அவர்கள் தொகுப்புரை வழங்கவும் பேராசிரியர் அரங்க. சிவப்பிரகாசம் அவர்கள் வரவேற்கவும் உள்ளனர். புலவர் இராம.சுவாமிநாதன் அவர்கள் நன்றியுரையாற்றுவார்.

இணையதள முகவரி:

www.venkataramaiah.org

கருத்துகள் இல்லை: