நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 7 நவம்பர், 2010

வான்புகழ் திருக்குறள்: பன்னாட்டுக் கருத்தரங்கம்

புதுவைப் பல்கலைக்கழகத்தின் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலமும் சென்னை வானவில் பன்னாட்டு மையமும் இணைந்து புதுவைப் பல்கலைக்கழகத்தில் மூன்றுநாள் திருக்குறள் மாநாட்டை நடத்த உள்ளன.

நாள்: 11, 12, 13 - 02, 2011(வெள்ளி, சனி, ஞாயிறு)

திருக்குறள் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளை எழுதியனுப்பினால் கட்டுரையை வல்லுநர் குழு ஆய்ந்து ஏற்றுக்கொண்டால் அதன் பிறகு பேராளர் கட்டணம் உருவா 800 (ஆய்வு மாணவர்கள் 400 உருவா) அனுப்பலாம்.

கட்டுரை அனுப்ப நிறைவுநாள்: 30.11.2010

மேலும் விவரங்களுக்கு:

முதுமுனைவர் ம.சா.அறிவுடைநம்பி
ஒருங்கிணைப்பாளர்,
சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம்,
புதுவைப் பல்கலைக்கழகம்,
புதுச்சேரி-605 014

m_s_arivudainambi@rediffmail.com

Cell: + 91 93603 27019

கருத்துகள் இல்லை: