நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

இனிதே நிறைவுற்ற திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியின் தமிழ் இணைய அறிமுக விழா


தூய நெஞ்சக் கல்லூரி

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியில்(தன்னாட்சி) தமிழ் இணையம் அறிமுக விழா 11.08.2010 அறிவன்(புதன்)கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரை நடைபெற்றது. தூய நெஞ்சக்கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் என 75 பேர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.


முனைவர் மரியசூசை அடிகளார்(முதல்வர்)

கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் அ. மரியசூசை அவர்கள் தலைமை தாங்கினார்.மாணவர்களுக்குத் தட்டச்சுப் பயிற்சியின் தேவை,கணிப்பொறி,இணையத்தின் தேவையை மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் அருட்தந்தையார் அவர்கள் எடுத்துரைத்தார். கு.கலையரசி அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்ற்றார். பேராசிரியர் பி.பாலசுப்பிரமணியன் அவர்கள் நிகழ்ச்சி பற்றியும் ,நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர் பற்றியும் அறிமுகவுரையாற்றினார்.

புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் கலந்துகொண்டு தமிழ் இணையம் வளர்ச்சியும் வாய்ப்பும் என்ற தலைப்பில் காட்சி விளக்க உரையாற்ற்றினார்.தமிழ் இணையம் கடந்து வந்த பாதையை நினைவுகூர்ந்து தமிழ் இணையத்துக்கு உழைத்த அறிஞர் பெருமக்களை நினைவூகூர்ந்தார்.சிங்கப்பூர் கோவிந்தசாமி,யாழன் சண்முகலிங்கம், உமர்தம்பி, முரசு முத்தெழிலன்,பாலா பிள்ளை,முகுந்து,கோபி,காசி ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் தமிழ் இணையத்துறைக்கு ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்தார்.

தமிழ் சார்ந்த தளங்களான மதுரைத்திட்டம், தமிழ் மரபு அறக்கட்டளை, நூலகம் தளம்,சுரதா,தட்சு தமிழ்,தமிழன் வழிகாட்டி,சங்கமம் லைவ்,தளவாய் சுந்தரத்தின் வலைப்பூ தளம் உள்ளிட்ட பல தளங்களின் சிறப்பை எடுத்துரைத்து ஒவ்வொரு தளத்தின் தனித்தன்மைகளையும் எடுத்துரைத்தார். பங்கேற்றவர்களுக்குத் தமிழ்த்தட்டச்சுக்கு உதவும் குறுவட்டுகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.தொடக்கத்தில் அனைவருக்கும் தமிழ் 99 விசைப்பலகையின் அமைப்பை விளக்கும் படப்படி வழங்கப்பட்டது. மாணவர்கள் தட்டச்சுப் பழகப் பத்து நிமையத்தில் பழகிக்கொள்ள முடியும் என்று கூறித் தமிழ் 99 பலகையின் அமைப்பு அனைவருக்கும் விளக்கப்பட்டதால் இனி அவர்கள் எளிதாகத் தட்டச்சுப்பழக முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

பேராசிரியர்கள் பொன்.செல்வகுமார்,மாரியப்பன்,பார்த்திபராசா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

க.பிரபாகர் அவர்கள் நன்றியுரையாற்றினார்.


அறிமுக உரையாற்றும் பேராசிரியர் பாலசுப்பிரமணியன்


கலந்துகொண்ட மாணவிகள்



பார்வையாளர்கள்


பார்வையாளர்கள்



பார்வையாளர்கள்

2 கருத்துகள்:

Murugeswari Rajavel சொன்னது…

தூய நெஞ்சம் நடத்தும் தமிழ் இணைய அறிமுக விழா இனிதே நிறைவுற்றது அறிந்து மகிழ்ச்சி!

Madesh R சொன்னது…

நம் திருப்பத்தூர் பேஜ் கு லைக் போடுங்க

http://www.facebook.com/TirupatturDistrict