நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 23 ஜூன், 2010

கோவை செம்மொழி மாநாட்டுப் படங்கள்...


கோவை, செம்மொழி மாநாட்டு அரங்கத்தின் முகப்பு

கோவை செம்மொழி மாநாட்டு அரங்கம், பந்தல்,மற்ற ஏற்பாடுகளைக் கண்டுவர எண்ணி இன்று(22.06.2010) மாலை 7 மணிக்கு அறையிலிருந்து புறப்பட்டு,7.30 மணியளவில் மாநாட்டு அரங்கை அடைந்தோம்.மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடியே நாங்கள் போக நேர்ந்தது.

போக்குவரவு காவலர்கள் நின்று போக்குவரவை ஒழுங்குப்படுத்தினாலும் மக்கள் கூட்டத்தால் மெதுவாகவே செல்லமுடிந்தது. பண்பாடு காக்கும் கொங்கு நாட்டு மக்கள் அமைதியாகத் திருவிழாவைக் காண்பவர்கள்போல் இலட்சக்கணக்கில் வந்து கண்காட்சி மண்டபம்,மாநாட்டுப் பந்தல்,அரங்கம்,வண்ணமுகப்பு,வரவேற்பு பதாகைகள்,தமிழ் இணைய மாநாடு நடக்கும் அரங்குகளைக் கண்டுகளித்தனர். உணவுக்கூடங்களில் கூட்டம் அலைமோதியது.

நான் நண்பர் மதன் அவர்களின் உந்துவண்டியில் சென்று அவருக்கு விடைகொடுத்து,பின்னர் சந்திப்போம் என்ற ஒப்புதல்படி பிரிந்தோம்.மாநாட்டு முகப்பு,உணவுக்கூடம்,கண்காட்சி அரங்கம் யாவும் மிகத்தேர்ந்த கலைஞர்களைக் கொண்டு கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருக்குறள் காமத்துப்பால் உள்ளிட்ட பிற பகுதிகளில் உள்ள பல குறட்பாக்களுக்கு விளக்கம் தரும் வண்ணம் படங்கள் சிறப்புடன் வரையப்பட்டிருந்தன.அதுபோல் உணவுக்கூடமும் சிறப்புடன் அமைக்கப்பட்டிருந்தது.

கூட்டத்தினரைக் கட்டுப்படுத்த தடுப்புகள் பல உள்ளன.மக்கள் நெடுந்தூரம் நடந்த களைப்பு போக உணவுகளை வாங்கிக் குடும்பத்தினருடன் உண்டு களித்தனர்.
நான் உணவுக்கூடம், கண்காட்சி முகப்பு,கொடிசியா வளாக முகப்பு,தமிழ் இணையக் கண்காட்சி அரங்கு உள்ளிட்டவற்றைப் பார்த்து(இணைய மாநாட்டுக் கண்காட்சிப் படங்களைக் காலையில் இணைப்பேன்) மீண்டேன். நண்பர் மதன் அவர்களைத் தேடிப்பிடித்து,வண்டியை எடித்தோம். அப்பொழுதுதான் குடியரசுத்தலைவர்,முதலமைச்சர் அந்த வழியில் வருவதாகச் சாலையில் போக்குவரத்தை நிறுத்தினர்.அரை மணிநேரம் காத்திருந்தோம்.

இடையில் அம்மா யோகரத்தினம் அவர்களை நலம் வினவி,உணவு முடித்து அறையை அடைய இரவு 11.30 மணியானது.


கொடிசியா அரங்கத்திற்குள் செல்லும் முகப்பு


உந்துவண்டிகள் குவிக்கப்பட்டிருந்த காட்சி




கைவினைப்பொருள் கண்காட்சி முகப்பு


கண்காட்சி முகப்பு




கண்காட்சி அரங்கம்

3 கருத்துகள்:

பனித்துளி சங்கர் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

Unitkokusjktsepang.blogspot.com சொன்னது…

செம்மொழி மாநாட்டுப் பதிவு மிக நன்று.இணைய மாநாட்டைப் பற்றி இன்னும் அதிகமான செய்திகள் தேவைப்படுகிறது ஜயா.
- சு.வாசு
பந்திங், மலேசியா.

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

படங்களும், தொகுப்பும் மாநாட்டை நேரே கண்டது போல் இருக்கிறது. தங்களின் பணியைத் தொடருங்கள். நன்றி!