நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 26 ஜூன், 2010

கனடா திருக்குறள் மொழிபெயர்ப்பாளர் யோகரத்தினம் செல்லையா


அம்மா யோகரத்தினம் அவர்களுடன் நான்

கனடாவில் வாழும் திருக்குறள் மொழிபெயர்ப்பாளர் யோகரத்தினம் செல்லையா அவர்கள் கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை படிக்க வந்துள்ளார்.அவரின் கட்டுரை நாளை காலை 10.30 மணிக்கு வெள்ளிவீதியார் அரங்கில் படிக்கப்பெற உள்ளது.வெள்ளிவீதியார் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிக்குத் திரு,சேம்சு ஆர்.டேனியல் அவர்கள் தலைமை தாங்குகின்றார்.யோகரத்தினம் அவர்களின் கட்டுரைத் தலைப்பு MY EXPERIENCE IN THE TRANSLATION OF THIRUKURAL.இன்று யோகரத்தினம் அம்மா அவர்களைக் கண்டு பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.72 அகவை ஆகும் அம்மா அவர்கள் கனடாவிலிருந்து தமிழார்வம் காரணமாகக் கோவை வந்துள்ளமை மகிழ்ச்சி தருகின்றது.


யோகரத்தினம் அம்மா,கிருட்டினன்(சிங்கப்பூர்),நான்,பெஞ்சமின் லெபோ(பிரான்சு)


அம்மா யோகரத்தினம் அவர்களுடன் நான்(வேறொரு கோணத்தில்)

கருத்துகள் இல்லை: