நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 27 மார்ச், 2010

புதுச்சேரியில் பெரியார் ஈ.வெ.இரா.சிந்தனைகள் நூல்தொகுதிகள் அறிமுகவிழா


தோழர் வே.ஆனைமுத்து


பெரியார் ஈ.வெ.இரா.சிந்தனைகள் நூல்

புதுச்சேரியில் பெரியார் ஈ.வெ.இரா.சிந்தனைகள் நூல்தொகுதிகள் அறிமுகவிழா 26.03.20010 மாலை 6.30 மணிக்குப் புதுவைத் தமிழ்ச்சங்கக் கட்டடத்தில் நடந்தது.பெரியாரியல் பேரறிஞர் தோழர் வே.ஆனைமுத்து அவர்களால் தொகுத்தளிக்கப்பட்ட பெரியார் ஈ.வெ.இரா. சிந்தனைகள் (இருபது தொகுதிகள்)இரண்டாம் பதிப்பு நூலின் அறிமுக விழாவுக்குச் சீனு. அரிமாப்பாண்டியன் அவர்கள் தலைமை தாங்கினார்.புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

புதுச்சேரியைச் சேர்ந்த தனித்தமிழ் அன்பர்கள்,சமூகச் சிந்தனையாளர்கள், பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு நூல்களைப் பெற்றுக்கொண்டனர்.300 பேருக்கு மேல் முன்பதிவு செய்துகொண்டவர்கள் நூல் தொகுதிகளைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.தந்தை பெரியார் அவர்களின் சமூகச்சீர்திருத்தம் பற்றியும்,நூல் தொகுப்பு முயற்சி பற்றியும் எடுத்துரைத்தார்.தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் வெளியூர் நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டியிருந்ததால் இடையில் விடைபெற்றுக்கொண்டார்.அவரைத் தொடர்ந்து பேராசிரியர் சோம.இராசேந்திரன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

பெரியார் சிந்தனைகள் இரண்டாம் பதிப்பு வெளிவர ஒன்றரை ஆண்டுகள் தொடர்ந்து உழைத்தவர் இவர்.இவர் தம் பதிப்புப்பணி பட்டறிவுகளையும், பெரியாரின் கொள்கை, அறிவுத்தெளிவையும் எடுத்துரைத்தார்.இந்தத் தொகுப்பில் நேர்ந்த சிக்கல்களையும் தோழர் வே.ஆனைமுத்துவின் அறிவுத்திறனையும் நினைவாற்றலையும் எடுத்துரைத்தார்.தந்தை பெரியார் கொள்கைகளை வே.ஆனைமுத்து அவர்கள் பரப்ப எடுத்துக்கொண்ட முயற்சி பற்றியும் விளக்கினார்.நூலின் உருவம், உள்ளடக்கம்,வெளியீடு என அனைத்து நிலைகளிலும் வே.ஆனைமுத்து மேற்கொண்ட முயற்சி பற்றி சிறப்பாக எடுத்துரைத்தார்.


தோழர் வே.ஆனைமுத்து உரையாற்றல்


நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்


தோழர் வே.ஆனைமுத்துவிடம் நான் நூல் தொகுதிகளைப் பெறுதல்

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

மகிழ்ச்சி, அய்யாவிடமிருந்து நேரிடையாகக் கிடைக்கப்பெற்றமை சிறப்பு.

நெற்றிக்கண் சொன்னது…

நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டதா?
இது போன்ற நிகழ்ச்சிகளை தங்கள் வலைப்பதிவில் இணைத்தால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்