நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

அறிஞர் அண்ணாவை நினைவுகூர்வோம்!

தமிழக வரலாற்றில் என்றைக்கும் நினைவுகூரத்தக்க பெயர்கள் தந்தை பெரியார்,அறிஞர் அண்ணா என்பனவாகும்.தமிழகத்தில் மொழி,இன,நாட்டு உணர்வு வளர்வதற்கு இவ்விருவரின் ஈகம் பெரும் பங்காற்றியுள்ளது.இவர்கள் எழுத்தாலும் பேச்சாலும் தமிழக மக்களைத் தட்டி எழுப்பியவர்கள்.தமிழ்மொழி,இலக்கிய வளர்ச்சிக்கு இவர்களின் பங்கு மிகுதியாக அமைந்துள்ளது.அரசியல் எழுச்சியிலும் இவ்விரு தலைவர்களின் பங்கு மிகுதியாக இருந்தது.

அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு நிறைவுவிழா தமிழகத்திலும்,புதுவையிலும் புதிய எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது.அறிஞர் அண்ணா பற்றி முழுமையாக அறிய கீழ்வரும் தளத்திற்குச் செல்லவும்
http://www.arignaranna.info/Home1.htm

கருத்துகள் இல்லை: