நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 23 ஜூலை, 2009

அயலகத் தமிழறிஞர்கள்,இணையம் கற்போம் என்ற இருநூல்கள் விரைவில் வெளிவர உள்ளன.


அயலகத் தமிழறிஞர்கள்

தமிழ் ஓசை நாளிதழில் தொடராக நான் எழுதி வெளிவந்த அயலகத் தமிழறிஞர்கள் தொடர் தனிநூலாக வெளிவர உள்ளது.இதில் தமிழுக்கு உழைத்த அயலகத் தமிழறிஞர்கள் முப்பதுபேரின் வாழ்க்கை,இலக்கியப் பங்களிப்பு பதிவாகியுள்ளன.தமிழர்களின் இல்லந்தோறும் இருக்கவேண்டிய நல்ல நூல்.

பக்கம்: 200
விலை: 200 உருவா

நான் பல்வேறு சமயங்களில் எழுதிய தமிழ் இணையம் சார்ந்த பதினைந்து கட்டுரைகள் தொகுக்கப்பட்டு இணையம் கற்போம் என்ற பெயரில் நூலாக வெளிவர உள்ளது.



பக்கம்: 112
விலை:100 உருவா

இரண்டு நூல்களும் ஆகத்து முதல் கிழமையில் கிடைக்கும்.

தொடர்புக்கு:
முனைவர் மு.இளங்கோவன்
செல்பேசி+ 91 9442029053
muelangovan@gmail.com


இசாக்,சென்னை
செல்பேசி + 91 9786218777
tamilalai@gmail.com

7 கருத்துகள்:

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

வாழ்த்துகள். இரு நூல்களையும் பெற்றுக் கொள்கிறேன்.

வலைப்பதிவின் புதிய வார்ப்புரு அழகாக இருக்கிறது.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

நன்றி திரு.இரவி
மு.இளங்கோவன்

செல்வா சொன்னது…

முனைவர் இளங்கோவன்,

நல்வாழ்த்துகள்! அறிந்து மிக மகிழ்கிறேன். கட்டாயம் வாங்கிப் படிப்பேன். மதுரை இளங்குமரனார் போன்ற நல்லறிஞர்கள் ஒரு சிலரே
தமிழறிஞர்களைப் பற்றி நூல்கள்
எழுதி நற்பணி ஆற்றியிருக்கின்றார்கள்.
தங்கள் மிக அருமையான வலைப்பதிவும், அதில் வருவனவற்றைத் திருத்தி, தொகுத்து
நீங்கள் அச்சு நூல்களாக கொண்டு வருவது கண்டு மிக மகிழ்கிறேன்.
மேலும் மேலும் வளர, செழிக்க
நல்வாழ்த்துகள்.

செல்வா,
வாட்டர்லூ, கனடா

லதானந்த் சொன்னது…

நெம்ப நல்லா இருக்குதுங்கோ!

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

வணக்கம் ஐயா.

அருமைத் தமிழ்நூல் ஒன்றினை ஆக்கியிருக்கும் தங்களின் நற்றமிழ்ப் பணி காலத்தால் நிலைத்திருக்கும்; அயலகத் தமிழறிஞர்களை வரலாற்றில் பதிவு செய்திருக்கிறீர்கள்.

தங்கள் பணி காலத்தால் வாழும்.

தாங்கள் நூலொடு மலேசிய நாட்டிற்கு வரவேண்டுகிறேன்.

வாழ்த்துகள் ஐயா.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

குறிஞ்சிக்குமரனார்,திருமாலனார் பயிற்றிய தமிழோடு மலேசியா வருவேன்.
அன்புள்ள
மு.இளங்கோவன்

முனைவர் கல்பனாசேக்கிழார் சொன்னது…

நூல்கள் வெளிவருவதில் மட்டற்ற மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.