நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 24 ஜூலை, 2009

பொ.தி.ப.அறக்கட்டளை நடத்தும் திருக்குறள் அதிகாரப்போட்டி பரிசளிப்பு விழா

இடம்: இராசராசேசுவரி திருமண மண்டபம்,பாக்கமுடையான்பட்டு,புதுச்சேரி
நாள்: 25.07.2009
நேரம்: மாலை 5 மணி

தலைமை: பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா அவர்கள்

வரவேற்புரை : தி.ப.சாந்தசீலனார்(பொ.தி.ப.அறக்கட்டளை நிறுவுநர்)

திருக்குறள் அதிகாரப்போட்டியைப் பொ.தி.ப.அறக்கட்டளை அண்மையில் நடத்தியது.தமிழகம் புதுவையிலிருந்து பலர் கலந்துகொண்டனர்.

இப்போட்டியில் கட்டுரை எழுதிப் பரிசு பெற்றவர்களுக்குப் பொ.தி.ப.அறக்கட்டளை சார்பில் உருவா எண்பதாயிரம் தொகைப்பரிசு வழங்கிச் சிறப்பித்தல் புதுவை பாராளுமன்ற உறுப்பினரும் நடுவண் அமைச்சருமான வே.நாராயணசாமி அவர்கள் ஆவார்.

புதுவை மாநில முதல்வர் வெ.வைத்தியலிங்கம்,பொதுப்பணித்துறை அமைச்சர் எம்.ஓ.எச்.எப்.ஷாஜகான் உள்ளிட்ட அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரைக்க உள்ளனர்.தமிழ்ப்பணி,சமூகப்பணி செய்யும் ஆர்வலர்களுக்கும் அறக்கட்டளை சார்பில் நிதியுதவி வழங்கிப் பாராட்டப்பட உள்ளனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டைப் பொ.தி.ப.அறக்கட்டளை அன்பர்கள் செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: