நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 23 ஜூலை, 2009

தமிழ் பேசும் முசுலிம்களின் தமிழியல், பண்பாடு, சமூகம் பற்றிய உலக ஆய்வு மாநாடு

இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக் கழக மொழித்துறை தமிழ் பேசும் முசுலிம்களின் தமிழியல், பண்பாடு, சமூகம் பற்றிய உலக ஆய்வு மாநாட்டை நடத்துகிறது. இதில் பன்னாட்டளவில் ஆய்வாளர்கள் கலந்துகொண்டு ஆய்வுரை வழங்க உள்ளனர்.ஆர்வமுள்ள பேராசிரியர்கள் பின்வரும் விளக்கங்களின் துணையுடன் பங்கேற்கலாம்.

மாநாடு நடைபெறும் நாள் 3,4,5,6-10-2009
இடம்: மொழித்துறை,தென்கிழக்குப் பல்கலைக்கழகம்,இலங்கை


ஆய்வுச்சுருக்கங்கள் கோரல்

தென்கிழக்குப் பல்கலைக் கழக மொழித்துறை தனது முதலாவது உலக ஆய்வு மாநாட்டினை நடத்தவுள்ளது. இம்மாநாடு இலங்கை நாட்டிலும் பிற நாடுகளிலுமுள்ள அறிஞர்கள் ஆய்வாளர்களை ஒன்று சேர்ப்பதுடன் மனிதப்பண்பியல், சமூக விஞ்ஞானம் தொடர்பாகத் தம் கருத்துக்களைப் பகிரவும் அறிவினை அகல்விக்கவும் உதவும்.

மாநாட்டின் கருப்பொருள்: “தமிழ் பேசும் முஸ்லிம்களின் தமிழியல், பண்பாடு, சமூகம்”.


இம்மாட்டீலே பங்குபற்ற விரும்பும் உலகின் பன்னாட்டு ஆய்வாளர்களையும், அறிஞர்களையும், பட்டமேற்படிப்பு மாணவர்களையும் மாநாட்டின் புரவலர்களும் ஒழுங்கமைப்பாளர்களும் வரவேற்கின்றனர். மாநாட்டில் பங்குபற்றி கட்டுரை படிக்க விரும்புபவர்கள் “தமிழ் பேசும் முஸ்லிம்களின் தமிழியல், பண்பாடு, சமூகம்” என்னும் கருப்பொருளுக்குட்பட்டுப் பின்வரும் ஏதாவது தலைப்பில் அய்வுச்சுருக்கத்தினையும் கட்டுரையினையும் படைக்கலாம்.

இலக்கியம், மொழியியல், பண்பாடு, வரலாறு, சமூகவியல், நாட்டார் வழக்காற்றியல்,
நாடகம், நுண்கலை, கல்வி, அரசியல், பொருளியல், தமிழ்ப் பேசும் முசுலிம்களின் மறுமலர்ச்சி.

ஆய்வுச்சுருக்கம் வழங்கல்:

நோக்கங்கள், ஆய்வணுகுமுறை, விளைவுகள், முடிவுகள் ஆகியன உள்ளடங்கியதாக 500 சொற்களுக்குள் ஆங்கிலத்திலோ தமிழிலோ ஆய்வுச்சுருக்கம் அமைதல்வேண்டும். ஆய்வுச்சுருக்கம் (Microsoft word (Time New Roman அல்லது Baamini/Kalagam, Font size 12) இல் தட்டச்சுச்செய்து சூலை மாதம் 31 அன்று அல்லது அதற்கு முன்னர் மின்னஞ்சலூடாக saadhiyas@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பிவைக்கவேண்டும். முழு வடிவிலான கட்டுரை ஆகத்து 30இற்குள் அனுப்பிவைக்கவேண்டும்.

வல்லுநர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்வுச்சுருக்கங்களை வழங்கியவர்கள் மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகளைப் படிக்கலாம்.

மாநாட்டில் பங்குபற்றும் வெளிநாட்டவர், நாட்டவர் $50/ பதிவுக்கட்டணமாகச் செலுத்தவேண்டும்.

பங்குபற்ற விரும்புபவர்கள் மாட்டு ஒழுங்கமைப்பாளர்களைப் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:

Mr. K. Raguparan / Mrs.M.A.S.F. Saadhiya

Secretaries / International Conference Committee
Department of Languages
South Eastern University of Sri Lanka

University Park, Oluvil #32360,

Mob.: 0094 718218177, 0094 718035182

Email: saadhiyas@gmail.com, centhini@gmail.com

கருத்துகள் இல்லை: