நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 7 ஜூலை, 2009

முனைவர் இரா.திருமுருகனார் நினைவேந்தல் நிகழ்வு

தெளிதமிழ்,தமிழ்க்காவல் இதழ்களின் ஆசிரியரும்,பன்னூல் எழுதித் தமிழுக்கு ஏற்றமுற வழங்கியவரும் முத்தமிழும் முறையுற அறிந்தவருமான முனைவர் இரா.திருமுருகனார் அவர்கள் 03.06.2009 இயற்கை எய்தியதை முன்னிட்டு அன்னாரின் தமிழ்ப்பணியைப் போற்றி மதிக்கும் வகையில் தமிழகத்திலும் பிற நாடுகளிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றவண்ணம் உள்ளன.

அவ்வகையில் புதுச்சேரியில் எதிர்வரும் 11.07.2009 காரிக்கிழமை காலை ஒன்பது மணிமுதல் மாலை ஐந்துமணிவரை தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் தமிழ் இன உணர்வாளர்கள் கலந்துகொண்டு முனைவர் இரா.திருமுருகனாரின் தமிழ்ப்பணிகளை நினைவுகூர உள்ளனர்.

நாள் : 11.07.2009
நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம்: புனித அந்தோணியார் பல்நோக்கு சமுதாயக்கூடம்,(சிங்காரவேலர் சிலை அருகில்,கடலூர்ச்சாலை,புதுச்சேரி)

தலைமை : பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா
100 பாவலர்கள் இரங்கற்பா படித்தல்
நினைவேந்தல் மலர் வெளியீடு : பழ.நெடுமாறன்
படத்திறப்பு : மருத்துவர் ச.இராமதாசு
உரைநிகழ்த்துவோர்
வே.ஆனைமுத்து
அருகோ
பெ.மணியரசன்
தியாகு
புதுக்கோட்டை பாவாணன்

தமிழுக்கு உழைத்த தலைமகனாரின் நினைவுகளைப் பேச,கேட்க,பாட வருக என விழாக்குழுவினர் அழைக்கின்றனர்.

தொடர்புக்கு : + 91 9843224827 + 91 2900889280 + 91 94867448035

கருத்துகள் இல்லை: