நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 6 ஜூலை, 2009

கோவையில் சிலப்பதிகார விழா

கோவை பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள நானி கலையரங்கில் எதிர்வரும்11,12-07-2009(காரி,ஞாயிறு)இரு நாளும் சிலப்பதிகார வெள்ளிவிழா நடைபெறுகிறது.

காரி(சனி)க்கிழமை மாலை5.45மணிக்கு முனைவர் க.ப.அறவாணன் அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் ஜி.கோபாலன் அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார். இயகோகோ. சுப்பிரமணியம் அவர்கள் மலர் வெளியிடுகிறார்.கே.வேலு அவர்கள் மலர் பெற்று உரையாற்றுகிறார்.

கிருட்டினா இனிப்பகம் வழங்கும் உ.வே.சாமிநாதய்யர் விருதினை முனைவர் தெ.ஞானசுந்தரம் அவர்களுக்கு வழங்க உள்ளனர்.செல்வி (உ)ருக்குமணி அவர்கள் பூம்புகாரில் சில புகார்கள் என்னும் தலைப்பில் உரையாற்றுகிறார்.

12.07.2009 ஞாயிறு காலை ஐ.கே.சுப்பிரமணியன் அவர்கள் உள்ளினும் உள்ளம் சுடும் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்

முனைவர் க.முருகேசன் அவர்கள் எழுதிய பூம்புகார் பொற்றொடி என்ற நூலினை முனைவர் தாயம்மாள் அறவாணன் அவர்கள் வெளியிட வி.செல்வபதி அவர்களும் சங்கரசீத்தாராமன் அவர்களும் பெற்றுக்கொள்கின்றனர்.

12.07.2009 காலை,மாலையில் நடைபெறும் விழாக்களில் தமிழகத்தின் புகழ்பெற்ற
பேச்சாளர்கள் சோ.சத்தியசீலன்,அ.அறிவொளி,தெ.ஞானசுந்தரம்,சோதி இராமகிருட்டினன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

மாலையில் பேரா.கண.சிற்சபேசன் அவர்கள் நடுவராக வீற்றிருக்கப் பட்டிமண்டபம் நடைபெற உள்ளது.

தமிழ்ப்பண்பாட்டையும் தமிழ் இசை மரபையும் ஆவணப்படுத்திய இளங்கோவடிகளையும் அவர்தம் காப்பியத்தையும் போற்றி எடுக்கப்படும் விழா சிறக்க எம் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் அமையட்டும்.

கருத்துகள் இல்லை: