நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 23 ஜூன், 2009

புதுச்சேரியில் கவிச்சக்கரவர்த்தி கம்பன் குறும்பட வெளியீட்டு விழா

புகழ்பெற்ற குறும்பட இயக்குநர் குணவதிமைந்தன் இயக்கிய கவிச்சக்கரவர்த்தி கம்பன் குறும்பட வெளியீட்டு விழா புதுச்சேரி சுய்ப்ரேன் வீதியில் அமைந்துள்ள புதுவை மாநிலக் கூட்டுறவு ஒன்றியக் கருத்தரங்கக் கூடத்தில் 28.06.2009 ஞாயிறு காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

புதுச்சேரி கம்பன் கழகம் ஏற்பாடு செய்துள்ள இந்த விழாவில் ந.கோவிந்தசாமி அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார்.அரசு வழக்கறிஞர் தி,முருகேசன் அவர்கள் தொடக்க உரையாற்றுகிறார்.

குறும்படத்தை வெளியிட்டு நடுவண் பாராளுமன்ற விவகாரம் மற்றும் கலைத்துறை அமைச்சர் மாண்புமிகு வே.நாராயணசாமி அவர்கள் உரையாற்றுகிறார்.

புதுவை மாநில முதலமைச்சர் மாண்புமிகு வெ.வைத்திலிங்கம் தலைமையில் நடைபெறும் விழாவில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் இரா.இராதாகிருட்டினன் அவர்களும் பிற அமைச்சர்களும்,நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரைக்கின்றனர்.

விழா நிறைவில் குறும்பட இயக்குநர் குணவதிமைந்தன் அவர்கள் ஏற்புரையாற்றுகிறார்.

தொடர்புக்கு
94432 60242
94435 00013

கருத்துகள் இல்லை: