நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 13 ஜூன், 2009

தமிழ் இணையப் பயிலரங்கம்-நாகர்கோயில்



தமிழ் இணையத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் குமரிமுனையில் தமிழ் இணையப் பயிலரங்கம் ஒன்றை நடத்த அமெரிக்காவில் உள்ள தமிழ் மணம் இணையத்தள நிறுவனமும், கலிங்கத்தமிழ் ஆய்வு நிறுவனமும்,மானிங் ஸ்டார் பாலிடெக்னிக் கல்லூரியும் இணைந்து திட்டமிட்டுள்ளன.இந்த நிறுவனங்களுடன் இணைந்து அமிர்தா ஊடக ஆய்வுமையமும், அமுதம் மாத இதழும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றன.

கணிப்பொறி,இணையத்தில் ஆர்வம் உடையவர்கள் இதில் பங்கேற்றுப் பயன் பெறலாம்.

இடம்: மானிங் ஸ்டார் பாலிடெக்னிக் கல்லூரி,
சுங்கான்கடை,நாகர்கோயில்(கன்னியாகுமரி மாவட்டம்)
நாள் : 20.06.2009 காரி(சனி)க்கிழமை
நேரம் : காலை 9.00 முதல் மாலை 5.00 மணிவரை

பயிலரங்கில் தமிழ்த்தட்டச்சு,மின்னஞ்சல்,வலைப்பூ உருவாக்கம்,புகழ்பெற்ற இணையத்தளங்கள் குறித்து காட்சி விளக்கத்துடன் செய்திகள் பேசப்படும்.மின்னிதழ்கள், நூலகங்கள், விக்கிபீடியா, விக்கி மேப்பியா பற்றியும் எடுத்துரைக்கப்படும்.புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன்,சேலம் செல்வமுரளி,ஒரிசா பாலு ஆகியோர் பயற்சியளிக்க உள்ளனர்.பயிலரங்கில் கலந்துகொள்ள உரூவா 100 பதிவுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.பகலுணவு உண்டு.

பதிவு செய்ய இறுதிநாள்: 18.06.2009.
முதலில் வருபவருக்கு முதல்வாய்ப்பு

தொடர்புக்கு
9994352587
9790307202
9789575900

1 கருத்து:

தகடூர் கோபி(Gopi) சொன்னது…

முனைவர் மு.இ,

நாகர்கோயில் பயிலரங்கம் மிகச் சிறப்பாய் நடைபெற வாழ்த்துகிறேன்.