நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 8 மே, 2009

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கம்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் நாற்பதாம் கருத்தரங்கம் 2009 மேத் திங்கள் 23,24 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. இந்தியா முழுவதிலிருந்தும் பேராசிரியர்கள்,ஆய்வாளர்கள் வருவதுடன் மலேசியா,சிங்கப்பூர் சார்ந்த பேராசிரியர்களும் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகளை வழங்க உள்ளனர்.

490 ஆய்வுக்கட்டுரைகள் படிக்கப்பெற உள்ளன.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இரா.கற்பக குமாரவேல்,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சபாபதி மோகன்,பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாசகம், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் ஔவை.நடராசனார் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.முன்பே திட்டமிடப்பட்டு,பதிவு செய்யப்பெற்றக் கருத்தரங்கு ஆதலின் இது குறித்த விளக்கம் பெற விரும்புவோர் பேராசிரியர் மு.மணிவேல் அவர்களைத் தொடர்புகொள்ளலாம்.
அவர்தம் செல்பேசி எண் : + 98655 34622

கருத்துகள் இல்லை: