நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 17 மார்ச், 2009

கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையப் பயிற்சி...

கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையப் பயிற்சி இன்று 17.03.2009 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிமுதல் 6.30 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்டம் சார்ந்த கிளை நூலகர்கள்,ஊர்ப்புற நூலகர்கள்,இணைய ஆர்வலர்கள் கலந்துகொள்கின்றனர்.நான் தமிழ் இணையம்,மின் நூலகம்,மின் இதழ்கள்,தமிழ் இணைய வளர்ச்சி குறித்த பயிற்சி வழங்குகிறேன்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நூலக அலுவலர் திரு சி.அசோகன் அவர்களும் மாவட்ட மைய நூலகர் திரு.சு.பச்சையப்பன் அவர்களும் சிறப்பாகச் செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: