நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 15 மார்ச், 2009

நாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கு

நாமக்கல்லில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைநூலகம்,ஊர்ப்புற நூலகம் சார்ந்த நூலகர்கள்,இணைய ஆர்வலர்கள் கலந்துகொள்ளும்
தமிழ் இணையப்பயிலரங்கு 16.03.2009 திங்கள் கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது.

முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு நூலகர்களுக்குத் தமிழ் இணையம் சார்ந்த செய்திகளை எடுத்துரைத்துப் பயிற்சியளிக்க உள்ளார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட மைய நூலக அலுவலர்,மாவட்ட நூலகர் ஆகியோர் சிறப்பாகச் செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: