நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 2 மார்ச், 2009

குடந்தைக் கதிர்.தமிழ்வாணன் உடல் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் ஒப்படைக்கப்பட்டது!

தமிழ் அறிஞர் குடந்தைக் கதிர்.தமிழ்வாணன் அவர்கள் இன்று(02.03.2009) காலை 6.45 மணியளவில் கும்பகோணத்தில் உள்ள அவர் இல்லத்தில் இயற்கை எய்தினார்.இச்செய்தி அறிந்து தமிழ் உணர்வாளர்கள் குடந்தை,தஞ்சை,புதுவை,கடலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் திரண்டனர்.

கதிர் தமிழ்வாணன் அவர்களின் கண்கள் கொடையாக வழங்க முன்பே உறுதி செய்திருந்ததால் மருத்துவர்கள் குழு வந்து கண்களை எடுத்துச்சென்றனர்.தமிழ் உணர்வளர்கள் கும்பலிங்கனார் இளஞ்சேட்சென்னி,பேகன், சனதா மாணிக்கம், ஆ.பிழைபொறுத்தான், கதிர் முத்தையன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு இரங்கல் கூட்டத்தில் உரையாற்றினர்.தி.மு.க.சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான திரு. உபயதுல்லா(தஞ்சை) அவர்கள் கலந்துகொண்டு அனைவருக்கும் இரங்கல் தெரிவித்தார்.

பின்னர் பகல் 1 மணியளவில் கதிர்.தமிழ்வாணன் அவர்களின் உடல் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மருத்துவர்களிடம் பிற்பகல் 2.30 மணியளவில் ஒப்படைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: