நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 12 நவம்பர், 2008

பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் திருவுருவப் படம்


பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்கள்

பெருமழைப் புலவர், பொ.வே.சோமசுந்தரனார் அவர்களின் சங்க இலக்கிய உரைச்சிறப்பில் மயங்கிய யான் அவர் பற்றி முன்பே கட்டுரை வரைந்துள்ளேன். அவரின் படம் ஒன்று இன்று பிரஞ்சு நிறுவன நூலகத்தில் பழைய செந்தமிழ்ச் செல்வி ஏடுகளைப் புரட்டிய பொழுது கிடைத்தது.முன்பு பார்த்த படங்களிலிருந்து இது தெளிவாக இருந்ததால் அனைவரின் பார்வைக்கும் வைத்துள்ளேன்.

நன்றி: செந்தமிழ்ச்செல்வி மாத இதழ்,கழக வெளியீடு.
பிரஞ்சு இன்சிடியூட் நூலகம், புதுச்சேரி

புலவர் வரலாறு அறிய...

கருத்துகள் இல்லை: