நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 29 செப்டம்பர், 2008

புதுவைத் தமிழ்ச்சங்க 41 ஆவது ஆண்டு விழா


புதுவைத் தமிழ்ச்சங்க ஆண்டுவிழா மேடையில் அறிஞர்கள்...

 புதுச்சேரியில் இன்று (29.09.2008) திங்கள் கிழமை காலை புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் 41 ஆம் ஆண்டுவிழா வேல்.சொக்கநாதன் திருமண மண்டபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. புலவர் சீனு.இராமச்சந்திரன் தலைமையில் நடைபெறும் விழாவில் புதுவை அரசின் கல்வி, கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு எம்.ஓ.எச்.எஃப். ஷாஜகான் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

 "நாட்டுப்புற இசையமுது" என்னும் பொருளில் யான் தமிழக நாட்டுப்புறப் பாடல்களின் சிறப்பைப் பாடி விளக்கினேன். மேலும் கேரள, இலங்கை, மலேசிய நாட்டுப்புறப் பாடல்களையும் எடுத்துரைத்தேன்.


மு.இளங்கோவன் உரை

 கல்விச்செம்மல் வி.முத்து, புலவர் நாகி, செ.ஆதவன் உள்ளிட்ட தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். புலவர் பூங்கொடி பராங்குசம் தொகுப்புரை வழங்கினார்.

மாலையில் நடைபெறும் விழாவில் முனைவர் இரா.திருமுருகன் அவர்கள் தமிழிசை அமுது வழங்கவும், புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு வெ. வைத்திலிங்கம் அவர்கள் சிறப்புரையாற்றவும் உள்ளனர்.

கருத்துகள் இல்லை: