நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 14 ஜூன், 2008

தமிழ்ப்படைப்பாளிகள் எங்கள் மக்களுக்கு உதவியாக இருக்கவேண்டும் -காசி ஆனந்தன்

தமிழகத்தில் 5 படங்கள் ஈழ மக்களைப்பற்றி வந்துள்ளது.
சிறுகதைகள் வரவில்லை.

ஓவியர் வீர சந்தானம்,ஓவியர் புகழேந்தி போன்ற கலைஞர்கள் ஈழமக்களின் விடுதலைக்கு பாடுபட்டுள்ளனர்.தமழ்ப்படைப்பாளிகள் எங்களுக்கு உதவ வேண்டும் என்றார்.

தமிழ்ச்செல்வன்(த.மு.எ.ச)
படைப்பு தனிநபர் சார்ந்தது.
படைப்பாளியிடமிருந்து வரவேண்டும்.
படைப்பாளிகள் கொள்கை வழியில் ஒன்றுதிரட்டமுடியும்.
சங்க இலக்கியம் பற்றி பேச ஆள் இல்லை.அனைவரும் நவீன இலக்கியத்தில் ஆய்வு செய்கின்றனர்.எனவே சங்க இலக்கிய விழிப்புணர்ச்சி வேண்டும்.

பாரதி கிருட்டிணகுமார்(இயக்குநர்)கருத்து,கொள்கை,இயக்கம் கடந்து இன்று கூடியுள்ளோம்.இலக்கியம் என்பது மானுடம் உயர்த்த துணைசெய்ய வேண்டும்.கலை இலக்கிய அமைப்பு இல்லாத இயக்கம் மந்தகதியில் இருக்கும்.வெள்ளத்தில் இறந்தவர்களைக்காட்டிலும் வெள்ள நிவாரணத்திற்கு இறந்தவர்கள் அதிகம்.
மறைமுகமாக ஆபாச நூல்கள் படித்தது போக இன்று ஆபாச நூல்கள் அனைவரும் படிக்கின்றனர்.ஆபாச படங்களைத்தனித்துப்பார்த்தோம்.இன்று குடும்பத்துடன் பார்க்கிறோம்.
தொடக்க கல்வி முழுவதும் தமிழில் கல்வி வேண்டும்.அப்பொழுதுதான் தமிழ் இலக்கியம்,படைப்பு மதிக்கப்படவேண்டும். பள்ளத்தை ஒரே பாய்ச்சலில் தாண்ட வேண்டும்.படிப்படியாகத்தாண்டக்கூடாது. கள்ளுக்கடைகளை முன்பு தனியார் நடத்தினார்.
பள்ளிகளை அரசு நடத்தியது. இன்று கள்ளுக்கடைகளை மதுக்கடைகளை அரசு நடத்துகிறது.
கல்வியை இன்று தனியார் தருகிறார்கள்.

தோழர் தியாகு
கலை இலக்கியம் என்பவை மக்களுக்கானவை. கலை கலைக்காகவே என்ற கோட்பாட்டுக்காலத்தை நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டும். கலை இலக்கியம் என்பவை இன்று அண்டிப்பிழைப்பதற்காக அமைந்துவிட்டது.கலை இலக்கியப்படைப்பாளர்களுக்கு மூலப்பொருள்கள் தேவை. அவை உழைக்கும் மக்களின் வாழ்க்கையாகும்.

மக்களுக்காக படைப்பது சிறப்பு.தமிழ்ச்சமூகத்தைப்பிடித்துள்ள நோய்களைப்போக்க படைப்புகள் பயன்படவேண்டும்.

கருத்துகள் இல்லை: