நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 14 ஜூன், 2008

தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்கம் தொடக்கவிழா இனிதே தொடங்கியது...

தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்க விழா சென்னை இமேச் அரங்கில் தொடங்கியுள்ளது.
நாகசுரம்,பறைமுழக்கத்துடன் விழா இனிது நடைபெற்றுக்கொண்டுள்ளது.

விழாவிற்குத்தமிழகத்தின் பலபகுதிகளிலிருந்தும் அயல்நாடுகளிலிருந்தும் கலை இலக்கியப்படைப்பாளிகள்,கல்வியாளர்கள் வந்துள்ளனர்.

முனைவர் பொற்கோ,கவிஞர் இன்குலாப்,பேராசிரியர் பழமலை,பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)பேராசிரிர் பிரம்மராசன்,பேராசிரியர் கு.அரசேந்திரன்,பேராசிரியர் அ.ம.சத்தியமூர்த்திமுனைவர் துரையரசன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் வந்துள்ளனர்
புலவர் இரா.இளங்குமரனார் வந்துள்ளார்.

சந்தனக்காடு கெளதமன்,தங்கர்பச்சான்,சீமான்,பச்சியப்பன் மற்றும் பல கலை இலக்கியப்படைப்பாளிகள் வந்துள்ளனர்

மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் மேடைக்கு வந்துள்ளார்கள்.

இன்னும் தொடர்வேன்...

இமேஜ் அரங்கிலிருந்து...

கருத்துகள் இல்லை: