நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 18 பிப்ரவரி, 2008

புதுச்சேரியிலிருந்து தமிழ்க்காவல் இணைய இதழ்...

புதுச்சேரியிலிருந்து அச்சு வடிவிலும் இணையவடிவிலும் பல இதழ்கள் வெளிவருகின்றன.அவ்விதழ்கள் இலக்கியம்,அரசியல்,சமூகம் எனப் பல போக்குடையன.

தெளிதமிழ் என்னும் பெயரில் முனைவர் இரா.திருமுருகனாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இதழ் தமிழ்,மொழி,இன,நாட்டு உணர்வுடன் அனைவராலும் விரும்பும் வண்ணம் வெளிவருகிறது.இவ்விதழ் இணைய வடிவிலும் கிடைக்கின்றது. இத்தெளிதமிழ் மாத இதழ் நடத்தியவர்கள் தமிழ்வளர்ச்சிக்கு நாளிதழ் ஒன்று வெளியிட நினைத்தனர்.அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் நடந்துவரும் வேளையில் உலகத்தமிழர்களுக்குப் பயன்படும் வண்ணம் தமிழ்க்காவல் என்னும்பெயரில் புதிய இணைய இதழ் ஒன்று தொடங்க உள்ளனர்.

தெளிதமிழின் நாளிதழ் முயற்சிக்கு இணையாகத் தமிழ்க்காவல் இணையவிதழ் வெளிவருகின்றது.வரும் மார்ச்சுத்திங்களில் இதழ் வெளிவர உள்ளது.பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா ஆசிரியராக இருப்பார்.ஆசிரியர் குழுவில் பேராசிரியர் தேவமைந்தன், திரு.நந்திவர்மன்,முனைவர் மு.இளங்கோவன் உள்ளனர்.

புதுச்சேரியிலும்,தமிழகத்திலும்,உலகின் பல பகுதிகளிலும் நடைபெறும் தமிழ் மொழி, இலக்கியம்,இனம்,பண்பாடு,வரலாறு சார்ந்த செய்திகளும் கட்டுரைகளும் இடம்பெற உள்ளன.தமிழுக்கு ஆக்கம் தரும் படைப்புகள்,செய்திகள் இடம்பெறும்.ஒலி-ஒளிக் காட்சிகள், ஒளிப்படங்கள் இடம்பெறும்.உலகத்தமிழர்கள் தங்கள் படைப்புகளை அனுப்பிவைக்கலாம். விரிவான விளக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

தொடர்பிற்கு :

முனைவர் இரா.திருமுருகனார்,
62,மறைமலையடிகள் சாலை,
புதுச்சேரி -605001,இந்தியா
கைப்பேசி : + 9362664390
மின்னஞ்சல் :irathirumurugan@yahoo.co.in

1 கருத்து:

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

மகிழ்ச்சி!
-தேவமைந்தன்