நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 11 ஆகஸ்ட், 2007

பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்குப் பாராட்டுவிழா

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முனைவர்
பொன்னவைக்கோ அவர்கள் அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

தமிழ் இணையப்பல்கலைக்கழத்தின் இயக்குநராக இருந்து தமிழை இணையத்தில் பயன்படுத்துவதற்கு இவர் எடுத்தமுயற்சி அனைவராலும் போற்றப்பட்டது.

தனித்தமிழிலும் தொழில்நுட்பத்திலும் இவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு.உலகத்தமிழர்களால் பாராட்டும் பணிகளை இவர்தம் பதவிக்காலத்தில் செய்துமுடித்தார்.

தமிழ்ப்பற்றும், தமிழ்உண்வும் கொண்ட முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்களுக்குத் தஞ்சாவூரில் 13.08.2007 ஆம்நாள் மாலை 6 மணிக்குப் பெசண்டு அரங்கில் தமிழியக்கம் சார்பில் பாராட்டுவிழா
நடைபெறுகிறது.

முன்னாள் துணைவேந்தர் முத்தையாமாரியப்பன் அவர்கள்
தலைமையில்விழா நடைபெறுகிறது.

முனைவர் கு.திருமாறன், திரு.சோமசுந்தரம், திரு.கோ.இளவழகன்,
பொறிஞர்பாலகங்காதரன்,மருத்துவர்நரேந்திரன்,பேராசிரியர்திருமுதுகுன்றன்,
முனைவர் இளவரசு, முனைவர் மு.இளமுருகன் உள்ளிட்டதமிழகத்து அறிஞர்கள் கலந்துகொள்கின்றனர்.

தமிழை இணையத்தில் உலவிட்ட தமிழ்ப்பற்றாளரை
நாமும் வாழ்த்துவோம். பாராட்டுவோம்.

முனைவர் மு.இளங்கோவன்
பாரதிதாசன் அரசு மகளிர்கல்லூரி
புதுச்சேரி,இந்தியா

muelangovan@gmail.com
பேசி: +9442029053

கருத்துகள் இல்லை: